Tuesday, October 11, 2016

ஒரு அற்புதமான
வித்தியாசமான
மகாபாரத பதிவு
கீதா உபதேசம்
குறித்து தெளிவு,,,

மாவீரன் அர்ச்சுனன் கிருஷ்ணனிடம்,

ஐயனே, பிதாமகன் பீஷ்மர், தலைவன் தர்மர், பக்திமான் பீமன் இவர்களெல்லாம் இருக்க* *அவசரபுத்தியும்,*
*கோபமும் கொண்ட* *எனக்கு கீதையை* *உபதேசிப்பது முறையோ என பணிந்து கேட்க,*

அதற்கு *ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா,*

""அர்ஜுனா ! நீ என்னோடு நெருங்கிப் பழகுபவன். என் மீது தோழமை கலந்த அன்புடன் இருப்பவன் என்பதால் நான் உனக்கு கீதையைச் சொல்ல வில்லை.

*நீ நினைப்பதுபோல் பிதாமகர் பீஷ்மரை அறங்கள் அனைத்துமுணர்ந்த ஒரு மகாத்மாவாக என்னால் கருதமுடியவில்லை.*

*சாஸ்திரங்கள் உணர்வதால்மட்டும் ஒரு மனிதனுக்கு சிறப்பு வந்துவிடாது;*

*"கடைப்பிடித்தால்தான் சிறப்பு" (implementation or execution)*.

கௌரவர்கள் *அதர்மம் புரிகிறார்கள் என்பதறிந்தும்* பீஷ்மர் அவர்கள் பக்கமே இருக்கிறார்.

அதேசமயம் பாண்டவர்களை தனியே பார்க்க நேரும்போது
*தர்மம் வெல்ல ஆசிர்வதிப்பதாகவும் கூறுகிறார்*.

*இது இரட்டை வேடம் (double standards).*

*ஒரே சமயத்தில் இரண்டு குதிரைகளில் சவாரி செய்வது சாத்தியமற்றது.*

*"எண்ணம், சொல், செயல் இவை ஒன்றாக எவனிடம் இணைந்திருக்கிறதோ அவனே உத்தமன்".*
பீஷ்மர் அப்படிப்பட்டவராக இல்லை.

தர்மர் கீதை கேட்கத் தகுதியானவர் என்பது உன் எண்ணம். அவர் நல்லவர்தான்.

*ஆனால் முன்யோசனை இல்லாதவர். தவறு செய்துவிட்டுப் பிறகு வருந்திக் கொண்டிருப்பது அவர் இயல்பு.*

தர்மர் நீதியையும் தருமத்தையும் கடைப்பிடிப்பவர் என்பதில் சந்தேகமில்லை.

*ஆனால், அவரால் தக்க நேரத்தில் தன் கடமை என்னவென்று உணர இயலவில்லை.*

பீமனைப் பற்றிச் சொன்னால் பீமன் அளவற்ற பலசாலி. பக்திமானும்கூட.

*ஆனால் அவனிடம் மனோபலமும் இல்லை; அறிவு பலமும் இல்லை. வீண் கோபத்தில் அவன் விளைவித்த விபரீதங்கள் அநேகம்.*

அர்ஜுனா ! நீ இவர்களைப்
போன்றவனல்ல மகாவீரன். அதிநுட்பம் வாய்ந்த அஸ்திர வித்தை பல கற்றவன் என்ற போதும்கூட,

*நீ முன் யோசனை உள்ளவனாய் இருக்கிறாய்.*

*அதுதான் உன் தனிச்சிறப்பு.*

*இதோ பார், உன்னைவிட வயதான, அறிவிலும் பெரியவர்களான பலரையும் மதித்து நீ இத்தனை வாதிக்கிறாய்*

*என்னிடம். களத்திலே நின்றபோதும்
உற்றார், உறவினர் மதிப்பிற்குரிய பெரியோர்களையெல்லாம் எப்படிக் கொல்வது

*–தேவைதானா இந்த யுத்தமும் இழப்பும் என்றெல்லாம் நீ யோசித்தாய்* .

*அத்தனை பேரையும் இழந்து* *அரசாட்சியைப் பெறுவதால்* *என்ன பெருமை* *இருக்க முடியும் என்று கலங்கினாய்*.

 *பிச்சை எடுத்து வாழவும்* *நான் தயார் என்று* *என்னிடம் கூறினாய்.

*நீ பதவி வெறியனல்ல. பழைய விரோதங்களுக்குப் பழி வாங்க வேண்டுமென்று* *முன்பு நினைத்திருந்த போதும், களத்தில்* *அவர்களை மன்னித்து*
*போரே வேண்டாம் என்று எண்ணுகிற உள்ளம் உன்னிடம் இருக்கிறது*.

*ஓரளவு நீதி எது அநீதி எது என்று சிந்திக்கிறனாகவே நீ* *எந்த தருணத்திலும்*
*இருந்திருக்கிறாய்.* *இதெல்லாம்தான் நான் உனக்கு கீதையை உபதேசிக்கக் காரணங்கள்*.

*"நீதியான வழியில் நடக்க அனைத்தையும் தியாகம் செய்யும் மனவலிமையும் தேவை"*.

*"தன்னுடைய புனிதமான கடமையை உணர்பவனுக்குத்தான் கீதை கேட்கும் தகுதி உண்டு"*.

*இப்போது புரிகிறதா அர்ஜுனா, நான் உனக்கு கீதை சொல்லக் காரணம் தனிச்சலுகை எதுவுமல்ல;*

*"தகுதிச் சிறப்புதான்"* காரணம். அர்ஜுனன் அப்போதும்கூட அகந்தை
எதுவுமற்றவனாய் அடக்கத்தோடு
 *ஸ்ரீகிருஷ்ணரைநோக்கி வணங்கி நின்றான்*.

No comments:

Post a Comment