ஒரு அற்புதமான
வித்தியாசமான
மகாபாரத பதிவு
கீதா உபதேசம்
குறித்து தெளிவு,,,
மாவீரன் அர்ச்சுனன் கிருஷ்ணனிடம்,
ஐயனே, பிதாமகன் பீஷ்மர், தலைவன் தர்மர், பக்திமான் பீமன் இவர்களெல்லாம் இருக்க* *அவசரபுத்தியும்,*
*கோபமும் கொண்ட* *எனக்கு கீதையை* *உபதேசிப்பது முறையோ என பணிந்து கேட்க,*
அதற்கு *ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா,*
""அர்ஜுனா ! நீ என்னோடு நெருங்கிப் பழகுபவன். என் மீது தோழமை கலந்த அன்புடன் இருப்பவன் என்பதால் நான் உனக்கு கீதையைச் சொல்ல வில்லை.
*நீ நினைப்பதுபோல் பிதாமகர் பீஷ்மரை அறங்கள் அனைத்துமுணர்ந்த ஒரு மகாத்மாவாக என்னால் கருதமுடியவில்லை.*
*சாஸ்திரங்கள் உணர்வதால்மட்டும் ஒரு மனிதனுக்கு சிறப்பு வந்துவிடாது;*
*"கடைப்பிடித்தால்தான் சிறப்பு" (implementation or execution)*.
கௌரவர்கள் *அதர்மம் புரிகிறார்கள் என்பதறிந்தும்* பீஷ்மர் அவர்கள் பக்கமே இருக்கிறார்.
அதேசமயம் பாண்டவர்களை தனியே பார்க்க நேரும்போது
*தர்மம் வெல்ல ஆசிர்வதிப்பதாகவும் கூறுகிறார்*.
*இது இரட்டை வேடம் (double standards).*
*ஒரே சமயத்தில் இரண்டு குதிரைகளில் சவாரி செய்வது சாத்தியமற்றது.*
*"எண்ணம், சொல், செயல் இவை ஒன்றாக எவனிடம் இணைந்திருக்கிறதோ அவனே உத்தமன்".*
பீஷ்மர் அப்படிப்பட்டவராக இல்லை.
தர்மர் கீதை கேட்கத் தகுதியானவர் என்பது உன் எண்ணம். அவர் நல்லவர்தான்.
*ஆனால் முன்யோசனை இல்லாதவர். தவறு செய்துவிட்டுப் பிறகு வருந்திக் கொண்டிருப்பது அவர் இயல்பு.*
தர்மர் நீதியையும் தருமத்தையும் கடைப்பிடிப்பவர் என்பதில் சந்தேகமில்லை.
*ஆனால், அவரால் தக்க நேரத்தில் தன் கடமை என்னவென்று உணர இயலவில்லை.*
பீமனைப் பற்றிச் சொன்னால் பீமன் அளவற்ற பலசாலி. பக்திமானும்கூட.
*ஆனால் அவனிடம் மனோபலமும் இல்லை; அறிவு பலமும் இல்லை. வீண் கோபத்தில் அவன் விளைவித்த விபரீதங்கள் அநேகம்.*
அர்ஜுனா ! நீ இவர்களைப்
போன்றவனல்ல மகாவீரன். அதிநுட்பம் வாய்ந்த அஸ்திர வித்தை பல கற்றவன் என்ற போதும்கூட,
*நீ முன் யோசனை உள்ளவனாய் இருக்கிறாய்.*
*அதுதான் உன் தனிச்சிறப்பு.*
*இதோ பார், உன்னைவிட வயதான, அறிவிலும் பெரியவர்களான பலரையும் மதித்து நீ இத்தனை வாதிக்கிறாய்*
*என்னிடம். களத்திலே நின்றபோதும்
உற்றார், உறவினர் மதிப்பிற்குரிய பெரியோர்களையெல்லாம் எப்படிக் கொல்வது
*–தேவைதானா இந்த யுத்தமும் இழப்பும் என்றெல்லாம் நீ யோசித்தாய்* .
*அத்தனை பேரையும் இழந்து* *அரசாட்சியைப் பெறுவதால்* *என்ன பெருமை* *இருக்க முடியும் என்று கலங்கினாய்*.
*பிச்சை எடுத்து வாழவும்* *நான் தயார் என்று* *என்னிடம் கூறினாய்.
*நீ பதவி வெறியனல்ல. பழைய விரோதங்களுக்குப் பழி வாங்க வேண்டுமென்று* *முன்பு நினைத்திருந்த போதும், களத்தில்* *அவர்களை மன்னித்து*
*போரே வேண்டாம் என்று எண்ணுகிற உள்ளம் உன்னிடம் இருக்கிறது*.
*ஓரளவு நீதி எது அநீதி எது என்று சிந்திக்கிறனாகவே நீ* *எந்த தருணத்திலும்*
*இருந்திருக்கிறாய்.* *இதெல்லாம்தான் நான் உனக்கு கீதையை உபதேசிக்கக் காரணங்கள்*.
*"நீதியான வழியில் நடக்க அனைத்தையும் தியாகம் செய்யும் மனவலிமையும் தேவை"*.
*"தன்னுடைய புனிதமான கடமையை உணர்பவனுக்குத்தான் கீதை கேட்கும் தகுதி உண்டு"*.
*இப்போது புரிகிறதா அர்ஜுனா, நான் உனக்கு கீதை சொல்லக் காரணம் தனிச்சலுகை எதுவுமல்ல;*
*"தகுதிச் சிறப்புதான்"* காரணம். அர்ஜுனன் அப்போதும்கூட அகந்தை
எதுவுமற்றவனாய் அடக்கத்தோடு
*ஸ்ரீகிருஷ்ணரைநோக்கி வணங்கி நின்றான்*.
வித்தியாசமான
மகாபாரத பதிவு
கீதா உபதேசம்
குறித்து தெளிவு,,,
மாவீரன் அர்ச்சுனன் கிருஷ்ணனிடம்,
ஐயனே, பிதாமகன் பீஷ்மர், தலைவன் தர்மர், பக்திமான் பீமன் இவர்களெல்லாம் இருக்க* *அவசரபுத்தியும்,*
*கோபமும் கொண்ட* *எனக்கு கீதையை* *உபதேசிப்பது முறையோ என பணிந்து கேட்க,*
அதற்கு *ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா,*
""அர்ஜுனா ! நீ என்னோடு நெருங்கிப் பழகுபவன். என் மீது தோழமை கலந்த அன்புடன் இருப்பவன் என்பதால் நான் உனக்கு கீதையைச் சொல்ல வில்லை.
*நீ நினைப்பதுபோல் பிதாமகர் பீஷ்மரை அறங்கள் அனைத்துமுணர்ந்த ஒரு மகாத்மாவாக என்னால் கருதமுடியவில்லை.*
*சாஸ்திரங்கள் உணர்வதால்மட்டும் ஒரு மனிதனுக்கு சிறப்பு வந்துவிடாது;*
*"கடைப்பிடித்தால்தான் சிறப்பு" (implementation or execution)*.
கௌரவர்கள் *அதர்மம் புரிகிறார்கள் என்பதறிந்தும்* பீஷ்மர் அவர்கள் பக்கமே இருக்கிறார்.
அதேசமயம் பாண்டவர்களை தனியே பார்க்க நேரும்போது
*தர்மம் வெல்ல ஆசிர்வதிப்பதாகவும் கூறுகிறார்*.
*இது இரட்டை வேடம் (double standards).*
*ஒரே சமயத்தில் இரண்டு குதிரைகளில் சவாரி செய்வது சாத்தியமற்றது.*
*"எண்ணம், சொல், செயல் இவை ஒன்றாக எவனிடம் இணைந்திருக்கிறதோ அவனே உத்தமன்".*
பீஷ்மர் அப்படிப்பட்டவராக இல்லை.
தர்மர் கீதை கேட்கத் தகுதியானவர் என்பது உன் எண்ணம். அவர் நல்லவர்தான்.
*ஆனால் முன்யோசனை இல்லாதவர். தவறு செய்துவிட்டுப் பிறகு வருந்திக் கொண்டிருப்பது அவர் இயல்பு.*
தர்மர் நீதியையும் தருமத்தையும் கடைப்பிடிப்பவர் என்பதில் சந்தேகமில்லை.
*ஆனால், அவரால் தக்க நேரத்தில் தன் கடமை என்னவென்று உணர இயலவில்லை.*
பீமனைப் பற்றிச் சொன்னால் பீமன் அளவற்ற பலசாலி. பக்திமானும்கூட.
*ஆனால் அவனிடம் மனோபலமும் இல்லை; அறிவு பலமும் இல்லை. வீண் கோபத்தில் அவன் விளைவித்த விபரீதங்கள் அநேகம்.*
அர்ஜுனா ! நீ இவர்களைப்
போன்றவனல்ல மகாவீரன். அதிநுட்பம் வாய்ந்த அஸ்திர வித்தை பல கற்றவன் என்ற போதும்கூட,
*நீ முன் யோசனை உள்ளவனாய் இருக்கிறாய்.*
*அதுதான் உன் தனிச்சிறப்பு.*
*இதோ பார், உன்னைவிட வயதான, அறிவிலும் பெரியவர்களான பலரையும் மதித்து நீ இத்தனை வாதிக்கிறாய்*
*என்னிடம். களத்திலே நின்றபோதும்
உற்றார், உறவினர் மதிப்பிற்குரிய பெரியோர்களையெல்லாம் எப்படிக் கொல்வது
*–தேவைதானா இந்த யுத்தமும் இழப்பும் என்றெல்லாம் நீ யோசித்தாய்* .
*அத்தனை பேரையும் இழந்து* *அரசாட்சியைப் பெறுவதால்* *என்ன பெருமை* *இருக்க முடியும் என்று கலங்கினாய்*.
*பிச்சை எடுத்து வாழவும்* *நான் தயார் என்று* *என்னிடம் கூறினாய்.
*நீ பதவி வெறியனல்ல. பழைய விரோதங்களுக்குப் பழி வாங்க வேண்டுமென்று* *முன்பு நினைத்திருந்த போதும், களத்தில்* *அவர்களை மன்னித்து*
*போரே வேண்டாம் என்று எண்ணுகிற உள்ளம் உன்னிடம் இருக்கிறது*.
*ஓரளவு நீதி எது அநீதி எது என்று சிந்திக்கிறனாகவே நீ* *எந்த தருணத்திலும்*
*இருந்திருக்கிறாய்.* *இதெல்லாம்தான் நான் உனக்கு கீதையை உபதேசிக்கக் காரணங்கள்*.
*"நீதியான வழியில் நடக்க அனைத்தையும் தியாகம் செய்யும் மனவலிமையும் தேவை"*.
*"தன்னுடைய புனிதமான கடமையை உணர்பவனுக்குத்தான் கீதை கேட்கும் தகுதி உண்டு"*.
*இப்போது புரிகிறதா அர்ஜுனா, நான் உனக்கு கீதை சொல்லக் காரணம் தனிச்சலுகை எதுவுமல்ல;*
*"தகுதிச் சிறப்புதான்"* காரணம். அர்ஜுனன் அப்போதும்கூட அகந்தை
எதுவுமற்றவனாய் அடக்கத்தோடு
*ஸ்ரீகிருஷ்ணரைநோக்கி வணங்கி நின்றான்*.
No comments:
Post a Comment